Sunday, January 2, 2011

பயணம்

பயணம்
பயணம்
வீட்டினில் வண்டி
இயல்பு நிலை,

வண்டியில் வீடு
இடப்பெயர்வு நிலை.

இன்றைய,
வாழ்க்கை பயணத்திற்கு
வண்டியில் வீடுதான் சரி.

ஏனெனில் -எம்மினத்தை
துடைத்தொழிக்க….
துரத்துவதுதானெ அவன் குறி!?

        (23 ஒக்ரொபர் 2008) (பூநகரியிலிருந்து இடம்பெயரும் அகதி)
அதிசய மரணம்
அதிசய மரணம்
கருவறையை
கல்லறையாக்க,
துப்பாக்கி ரவைகள்,
கர்ப்பிணியின் உடல் புகுந்து
சிசு உயிர் துளைத்து…

பிறப்பிற்கு முன்னேயும்
மரணத்தை நிகழ்த்தும்
இலங்கையின் இனவெறிக்கு
இது உதாரணம்,
இதைவிட எது உலகரணம்?
           (நேற்று 27 மார்ச் 2009 -வன்னியில் படையினரின் தாக்குதலில் மாண்ட 61 பொதுமக்களில், பிறக்காத இந்த சிசுவும் அடக்கம்)

யார் குற்றம்
யார் குற்றம்
ஒற்றை கொலுசோடு
உருகுலைந்து கிடக்கும்
பெற்றவள் உடலருகெ
பிள்ளையும் நசுங்கி…
…  ….  … 
உலகே…. ….
இங்கே குற்றம் என்ன?

ஈழத்தில் தமிழினமாய் பிறந்ததா?
இல்லை _ நீ
இலங்கையை கண்டிக்க மறந்ததா?

        (26 ஏப்பிரல் 2006 – மூதூரில் சிறிலங்கா படையினரின் கொலைவெறித் தாக்குதல்)

No comments:

Post a Comment