Sunday, January 2, 2011

தளிர்மனம்

இழப்பு
இழப்பு
பாலூட்டிய மார்புகள்
சோறுட்டிய கைகள்
கரிகட்டைகளாக,

தன்னின வேர்களின் அழிவை
தாங்குமா…இத்தளிர்
?

சிங்களவெறி
சிங்களவெறி
இறந்தவர்களை எரிப்பது
சிலரின் நெறி,

இறப்பதற்காக எரிப்பது
சிங்களனின் வெறி.

வெறிச்சின்னம்
வெறிச்சின்னம்
எறிகணை கைநீட்டி
கருவறை உயிர்த்தேடி
சிசு கறி தின்னும்
சிங்கள வெறியர்க்கு…

இந்தப் படமே…ஆதாரம்!
உலகே,
இனியும் மௌனம்
என்பது உனக்கு அவமானம்!!

No comments:

Post a Comment