Sunday, January 2, 2011

மிரட்சி

மிரட்சி
மிரட்சி
இந்த அனிச்ச முகத்தை,
உற்று கவனியுங்கள்!.

குருதியைவிட
கூடுதலாய்த் தெரியும் ‘மிரட்சியை’

விழுந்து வெடிப்பதற்கு தெரியாதுதான்,
வீசுகின்றவனுக்குமா தெரியாது?
குழந்தை என்று!

இன அழிப்பே அவனது இலக்கு!
குழந்தை என்பதா அவனுக்கு கணக்கு?!


குருதிப் புனல்
குருதிப் புனல்
நாடாளும் (ரா)நாசப்பச்சே!
உன்,
கொலைவெறி மோகத்திற்கும்,
அரசாளும் தாகத்திற்கும்,

ஈழத்தமிழினமே இரையாச்சு-அவர்
இரத்தம்கூட புனலாச்சு.

வலி
வலி
வாழ்ந்த வீடு,
வளமான பூமி,
நெடுங்கால உறவு,
நிம்மதி வாழ்வு

அத்தனையும் பிய்த்தெறியும்
அரச வன்முறையால்

எத்தனை இழந்திருந்தால்,
இத்தனை வலித்திருக்கும்!.

பார்வை
பார்வை
இதில் தெரிகிறது
இன அழிப்பிற்கான வேகமும்,
ஈழத்திற்கான தாகமும்.

No comments:

Post a Comment