Sunday, January 2, 2011

உயிர்…

உயிர்...
உயிர்...
கரைகின்ற என் உயிரை…
காற்றோ  தடுக்கிறது!.
உலகமோ தவிர்க்கிறது!!.

       (ஈழத்தில் ஒரு பட்டினிக் காட்சி)
இழப்பு
இழப்பு
இழப்புகள் என்பது…
எங்களின் உரிமையாகிவிட்டது!

ஆனால்,
உரிமைகள் இன்னமும்
இழப்புகளாகவே…இருக்கின்றன.

        (ஈழத்தில், இதயம் கணக்கும் காட்சி)
''அவை''
''அவை''
ஒரு தாய்
ஒரு தந்தை
இரு குழந்தைகள் என
மகிழ்ச்சியால் நிறைந்திருந்தது வீடு.

பின்,
ஒரு தாய்
ஒரு தந்தை
இரு குழந்தைகள் என
மரணத்தால் நிறைந்திருந்தது வீடு.

”மகிழ்ச்சி”
அவை வராதத்திற்கான அடையாளம்.

”மரணம்”
அவை வந்துச்சென்றதன் அடையாளம்.

அந்த ”அவை”
சிங்கள வெறி கும்பல்!.

        (13 மே 2006 _ல் யாழ் தீவகம், அல்லைப்பிட்டியில் கடற்படையின் வெறிச்செயல்)
   (தமிழ் மனத்திற்காக மறுப்பதிவு)
இலங்கை தேனீர் குடிப்பது,
ஈழதமிழரின்….
”இரத்தத்திற்கு” நிகரானது.

இலங்கை உடை உடுத்துவது,
”நிர்வாணமாய்…
நிற்பதற்கு நிகரானது.

இலங்கை விமானச் சேவை நாடல்,
நான்கு குடும்பத்தை…
”அகதி” யாக்கும் முயற்சி.

உறவுகளே!
இலங்கை பொருட்கள் தவிர்ப்போம்1
ஈழ உறவுகளை காப்போம்.


ஸ்ரீலங்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாம் கொடுக்கும் பணம் ஸ்ரீலங்கா அரசு குண்டுகளை வாங்கி எமது மக்கள் மீது போடவே பயன்படுகிறது எனவேசிறிலங்காவின் உற்பத்தி பொருட்களையும் சேவைகளையும் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்குமாறு கனடிய தமிழ்மக்கள் உட்பட புலம்பெயர் தமிழர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
.boycot4

No comments:

Post a Comment