Sunday, January 2, 2011

சாட்சி

சாட்சி
சாட்சி
இன அழிப்பே
தீர்வென சிங்களன்
தினமும் அரங்கேற்றும் காட்சி!,
அவன்,
கொலை ருசிகண்ட
கோரத் தாண்டவத்திற்கு
இதைவிட வேறென்ன சாட்சி?!

                  (09 சூன் 2006 -ல், மன்னாரில் சிங்களப்படையின் தாண்டவம்)

சிதைவு
சிதைவு
உடலை பிளந்த அந்த
உந்துகணைக்கு -எங்கள்
வாழ்வையும்,
உயிரையும்…

சிதைக்க மட்டுமே தெரியும்!

எனெனில் அது,
சிந்திக்க தெரியாத
சிங்கள ஆயுதம்.

                (வன்னியில் நேற்றைய இராணுவ தாக்குதல்)
சுமை
சுமை
இரண்டாம் தலைமுறையை
இலங்கை (இராணுவம்) கொன்றதால்,

முதல்தலைமுறை சுமக்கிறது – தன்
மூன்றாம் தலைமுறையை.

    (நேற்று வன்னியில், தன் மகனை பறிகொடுத்த கிழவி பேரனோடு)
                                              (23 மார்ச் 2009)

தாய் நிலம்
தாய் நிலம்
சிறுக சிறுக
சீர்படுத்தி – எங்களால்
வளப்படுத்தப்பட்ட தாய்நிலம்,

எதிரிகளினால் பாழ்படுத்தப்பட்டு,
எங்களைப்போலவே

எங்கள் தாய் நிலமும்
”அகதியாய்”.

No comments:

Post a Comment