Sunday, December 26, 2010

குழி

குழி
குழி
எல்லோரும் வெட்டுவார்கள்,
உடல் புதைக்க…….
ஈழத்தில் வெட்டுகிறோம்,
உயிர் பிழைக்க !!!!!

   (வாழ்வைத் தொலைத்து, வாடும் நம் உறவுகள்)
கூட்டு, வேட்டு, ஓட்டு?!
கூட்டு, வேட்டு, ஓட்டு?!
இந்தியாவை ஆளும் நீ,
இலங்கையோடு ஏன்வைத்தாய் கூட்டு?-அங்கே
எம்மின வாழ்விற்கு வைக்கிறாயே வேட்டு!
இனியுமா உனக்கு தமிழனின் ஓட்டு!!
 
    (இந்தியாவின் துணையுடன் இலங்கையின் வன்முறையால், கண்ணீர் விட அவகாசமின்றி……உயிர்விடும் நம் உறவு.)
கோழையின் வீரம்
கோழையின் வீரம்
நா(ரா)சப்பச்சே கொஞ்சம் யோசி!
நாசம் செய்வதை கூடிப்பேசி,
நச்சு எரிகுண்டை நாற்புறமும் வீசி.
கொத்துக்கொத்தாய்ச் செய்கிறாய் கொலை!,
உலகம்,
உற்று கவனித்தால்  என்னவாகும் உன் நிலை?!!

    (  உலகிலே தடை செய்யப்பட்ட அயுதங்களை பாவித்தாவது விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு இந்தியாவும், சிறிலங்கா கொடிய அரசும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றது.  எரி நச்சுக்குண்டு பட்டு உடல் எரிந்த நிலையில் இறந்துகிடக்கும் போராளிகள்)  (திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2009,)
வெறியாட்டம்
வெறியாட்டம்
ஒற்றைத் தமிழனை துன்புறுத்தி
உடுத்தியதை துகிலுரித்து,
சுற்றிநின்று அவமதித்து
எட்டி உதைக்குது,
காட்டுமிராண்டிகளின்  கூட்டம்!. -இது
கால்நூற்றாண்டுக்கு முன்பே
சிங்களன் போட்ட வெறியாட்டம்!!.

    (1983 கறுப்பு யூலையில் நடந்தேறிய கொடூரம்

இடர்

இடர்
இடர்
தெரிகிறதா……
இடர்களுக்கு மத்தியில்
எங்களின் ஏக்கம்?

இன்னுமா வரவில்லை
எங்களிடம் தாக்கம்??

      (ஈழத்தில் ஒரு காட்சி)
மிரட்டல்
மிரட்டல்
குழியின் நெரிசலால்
கொஞ்சம் வெளியில் வந்தேன்.

அந்த நேரத்திலும்,
ஆகாய சத்தம் மிரட்டுது!
அன்றாடம் எம்வாழ்வை,
அரச யுத்தம் விரட்டுது!!.
      
   (நிம்மதியின்றி……நாளும் மிரளும் நம் உறவு)
துரத்தல்
துரத்தல்
சிதைத்து துரத்தும்
சிங்களத்தால்……..,
வாழ்விடம் இழந்து
வந்த இடம் இது.

இங்கிருக்கும் மிருகம் கூட
பாவம் பாக்குது.(பார்க்கிறது)
அந்த,
இனாழிப்பு மிருகம் தான்
பாய்ந்து தாக்குது!.

(இன அழிப்பிற்கு பயந்து,
இளைப்பாறும்
உயிரும்…………..
உடமைகளும்…….)

வீடு

வீடு
வீடு
சிறகிருக்கும் பறவைக்கு
மரத்தில் கூடு,

சிறகொடிந்த எங்களுக்கு
மரமே…வீடு!.

       (சிங்கள வெறியர்களால் சிதறிய குடும்பம்)
மலிவானது மரணம்
மலிவானது மரணம்
பட்டினி பாதி தின்றது
படைவெறி மீதி தின்றது.

மலிவாகிப் போனது
தமிழனின் மரணம்!,
மற்றவரும் சாகும்முன்
தமிழீழம் வரணும்!!.

                       (  04 ஏப்ரல் 2009)   ( சிறிலங்காவின் இனப்படுகொலைக்கு உள்ளாகியுள்ள வன்னியில் கடந்த 28, 29, 30ம் திகதிகளில் இடம்பெற்ற படுகொலைத் தாக்குதல், ஒரு காட்சி)
துயரம்
துயரம்
ஒ…உலகமே!
… … ….
முழுமையாய் கைகால்
முளைக்காத…எனக்கு,

எறிகணையின் அதிர்ச்சி
மரணத்தை தந்தது…..

என்…மரணமாவது
உன்க்கு அதிர்ச்சியை தந்ததா?

                ( சிறிலங்காவின் இனப்படுகொலையில் கர்ப்பிணிப் பெண்களும் பலியாகி வருகின்றனர்.  கடும் எறிகணைத் தாக்குதல் அதிர்ச்சியில் ஆறு மாதக் கருவொன்று வயிற்றிலேயே இறந்துள்ளது. 28 வயதான கர்ப்பிணிப் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வயிற்றில் இருந்து குழந்தை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதும், தாயாரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.          திகதி- 15-மார்ச் ௨009.)    (தமிழ் மனத்திற்காக மறுபதிவு)

உச்ச”வதை”

உச்ச"வதை"
உச்ச"வதை"
வயிற்றை கிழித்து
கருவைக் கொல்லுது,
இலங்கை இராணுவம்!.

தட்டிக் கேக்காத
உலகினால் விளைந்தது…
இந்த ஆணவம்!!

உலகே!
உற்றுக் கவனி
சற்று…இதை!

இது -தமிழ்,
உயிர்க்கு செய்கின்ற
உச்ச “வதை”.

       (இலங்கை இராணுவ ஆயுதம், கர்பிணிப் பெண்ணின் கருவறை புகுந்த கொடூரம்)

விடியல்

விடியல்
விடியல்
முன்னிரவில் கதைத்து _பின்
முழு இரவும் உறங்கி…
வெடிச்சத்தம் இல்லாது
விழிக்கின்ற விடியலே! _எம்மினம்
விரும்புகின்ற விடியல்!.

     (முன்னோரு நாள் வன்னியில்,
      கந்தக நெடியில்லாத ஓர்…
      காலைப்பொழுது)

பாடசாலையிலும்…!!!

பாடசாலையிலும்...!!!
பாடசாலையிலும்...!!!
பறக்கும் வான்படை
கொல்லத் துடிக்குது,
பாடசாலையிலும்
குண்டு வெடிக்குது.

பதுங்குக் குழிக்குள்
பள்ளிப் பிள்ளைகள்,
பயந்து ஒளியும்
சின்ன முல்லைகள்.

மனசாட்சி உள்ளோரை
இக்காட்சி வருத்தும்,
கொலைவெறி மகிந்தாவை…
நீதிக்கூண்டில் நிறுத்தும்!

      (பாடசாலையிலும் படை மிரட்டலுக்கு உள்ளாகி, துயருரும் நம் குலக் கொழுந்துகள்)   (ஈழம் பற்றிய என் ஐம்பதாவது படைப்பு இது.)
ஒற்றை நம்பிக்கை
ஒற்றை நம்பிக்கை
என்,
உறவுக்கென்ற…
ஒற்றை நம்பிக்கையின்
உயிர் உறங்கிவிட்டது.

என்,
உறவு எல்லையும்…
என் ஒரே உயிரில் சுருங்கிவிட்டது.!

         ( பாதுகாப்பு வலயப் பகுதிகளான அம்பலவன்பொக்கணை, வலைஞர்மடம் மற்றும் பச்சைப்புல்மோட்டை ஆகிய பகுதிகளில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3:15 மணி தொடக்கம் பகல் முழுவதும் சிறிலங்கா படையினர் ஆட்லறி எறிகணை, பல்குழல் பீரங்கி, ஆர்பிஜி உந்துகணை மற்றும் தொலைதூர துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை      அகோரமாக நடத்தினர். ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009)
மொட்டுகள்
மொட்டுகள்
கண்நிறைந்தப் பூக்கள்
காய்ந்தாலே மனம் வாடும்!

சிங்களத்தின் வான்படையோ
பூக்களில்தான் குண்டு போடும்!!

(முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பிரதேசம் மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிறு அதிகாலை நடத்திய அகோர எறிகணை, துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 294 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 432 பேர் படுகாயமடைந்துள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 )

விளிம்பில்…

விளிம்பில்...
விளிம்பில்...
அழகிய குழந்தையின்
உயிர் மெல்ல கரையுது,

அகில தேசத்தின்
மனசாட்சி மறையுது,

கையின் விளிம்பிலும்
காலத்தின் விளிம்பிலும்,
…  …  …
காட்சியால் இதயம் உறையுது!.

       (இலங்கையின் இன அழிப்பு போரினால்….
        வாழ்வின் விளிம்பில், பட்டினிக் குழந்தையின்…பால்முகம்)

சினம் பிறக்குது
சினம் பிறக்குது
மழலையின் பாதம்
மண்ணில் பட்டாலே…
மனமது துடிக்கும்.

மழலையின் தலையையும்
மண்ணோடு நசுக்குவது…
இலங்கையைத் தவிர்த்து
எங்கே நடக்கும்?

இந்தக் காட்சியால்
மனம் கணக்கிறது,
மகிந்தா உன்மேல்
சினம் பிறக்கிறது!.

     (ஈழத்தில் நம்மினம் இப்படி _இந்த
      இனத்தை காப்பது எப்படி?)

        
வாழும்கிட்லர்
வாழும்கிட்லர்
அவன்,
பல நாட்டை மிரட்டினான்.
இவன்,
பல நாட்டிற்கு விரட்டினான்

அவன்….
இனத்தை அழிப்பதற்காக
ஆள நினைத்தவன்.
இவன்….
ஆளுவதற்காக
இனத்தை அழிப்பவன்.

அவன் வாழ்ந்த கிட்லர்.
இவன் வாழும் கிட்லர்!

                 (வாழும் கிட்லராக…ரா(நா)சப்பச்சே)
குழந்தைவேட்டை
குழந்தைவேட்டை
வெறிகொண்ட ராசப்பச்சேவின்
                                                    
வேட்டை!
குதறி போட்டிருக்கிறது
குழந்தையின் உயிர் கூட்டை!!

குழந்தை என்றால் …
உள்ளம் உருகும்,
மகிந்தா உனக்குள்
எத்தனை மிருகம்.
    
    (படம் கொடூரம் என்று பார்ப்பதை தவிர்க்காதிர்கள்………………………..
 பார்க்கும் உங்களுக்கே துயரென்றால்…… பட்டுணரும் அவர்களுக்கு??????????)

வன்முறையின் எச்சம்

வன்முறையின் எச்சம்
வன்முறையின் எச்சம்
இது எங்கள்,
குடும்ப வியர்வையை
குழைத்துக்கட்டிய வீடு.

எங்களின் மூச்சுக்காற்று…
முட்டிமோதி…
நிம்மதியைப் பிரதிபலித்த சுவர்கள்,

எங்களின் மகிழ்ச்சியை
அடைகாத்த கூரை…

அப்பம்மா மடியில் நானும்
அம்மா மடியில் தங்கையும் என…
கதைத்துக்கொண்டிருந்த கூடம்,
அத்தனையும்,
சிதைந்து சின்னாப்பின்னம் ஆனது
சிங்கள துப்பாக்கியின் சீறலில்.

இன்று எச்சமாக…
காயம்பட்டச் சுவரும்….\,
உயிர் பிழைத்த நானும்.

             (ஆண்டுகள் கடந்து பல கடந்து
               ஆசைக்கு ஒரு படம்…வாழ்ந்த இடத்தில்)

உலகே…நிறுத்து

உலகே...நிறுத்து
உலகே...நிறுத்து
யுத்தம் வழியே
தமிழினம் சாகுது!
இரத்தம் வழிய
தமிழ் உயிர் வேகுது!!

உலகே…நிறுத்து!,
இலங்கையின் யுத்தத்தையும்!,
எம்மின இரத்தத்தையும்!!,
      
        (வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009
ஒரு காகம் இறந்தால் ஆயிரம் காகம் கூடியழும். தமிழன் இறந்தால்
அவன் சொந்தங்களே அழமுடியாத நிலை. இறந்தவர்களை விட
இருப்பவர்களை காப்பதுதான் இப்போதுள்ள அவசரம்)
இனவெறி...
இனவெறி...
இலங்கையின்
இனவெறி உருவாக்கிய,
சனங்களும்…
பிணங்களும்…!.

      ( வன்னியில் சிறிலங்கா அரசின் பிணந்தின்னிப் படைகள் நடாத்திய இனப்படுகொலை.  வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2009)
உறவின் உடல்கள்
உறவின் உடல்கள்
உயிர்களாய் இருந்த உறவுகளை
உடல்களாய் ஆக்கிவிட்டது இலங்கை!
உலகே…இனியேனும்,
உடைத்தெறி உன் மெளன விலங்கை!!  

              ( படையினரின் அகோர எறிகணைத் தாக்குதலில் இன்றும் 287 பொதுமக்கள் பலி; கியூடெக் பணிப்பாளர் உட்பட 300 பேர் படுகாயம்.    வியாழக்கிழமை, 23 ஏப்ரல் 2009)                                    



ஆயுத முத்தம்!
ஆயுத முத்தம்!
“புத்த”ம் செய்கிற யுத்தம்_ஈழ
 பூமியை தாக்குது நித்தம்_அங்கே
 பூவிற்கும் ஆயுத முத்தம்!!.

   (இனவெறி ஆயுதத்திற்கு
    இலக்கான சிறுவன்)

நம்பிக் “கை”

நம்பிக்"கை"
நம்பிக்"கை"
பு(யு)த்த பூமியில்,
வழிந்தோடும் குருதியிலும்
வாழும் நம்பிக்”கை” இருந்தது!.

இன்று…
சிங்கள ஆயுதத்தால்
சிதைந்துப் போனது…

என்,
வாழும் நம்பிக்”கை”யும்,
வடிவான நல்ல “கை” யும்.

     (சிங்கள இனவெறியால்…
      சிறகிழந்த நம்முறவு.)

மாலதி.....
மாலதி.....
நீயும்…நானும்
ஒரே வீதியில்தான் வசித்தோம்,
ஒரே பாடசாலையில் படித்தோம்,
உன் பார்வைக்குள் நானும்…
என் பார்வைக்குள் நீயுமென களித்தோம்.

இனவெறி தாக்குதல்…நம்மை
இருவேறு திசைகளில் விசிறியடிக்க…
…   …   …

இன்று…
என்,
மனமெல்லாம் நீயிருக்க…!
என் தோழி…
மாலதி நீ எங்கிருக்க?

           (இன்றைய ஈழத்தில்
             இடபெயர்வின் அதிர்வு)

கண்ணீர் ?????
கண்ணீர் ?????
காயமொன்றே வாழ்க்கையென்றால்
தழும்புகள் தெரியாது!.
காலம்முழுதும் அழுகையென்றால்
கண்ணீர் சுரக்காது!!.

இது,
தொடர்வலியின் வெளிப்பாடு!.
இனவெறி,
தொடர்ந்து தாக்குது விழிப்போடு!!.

          (திங்கட்கிழமை, 20 ஏப்ரல் 2009. வன்னியின் ‘பாதுகாப்பு வலய’ பகுதியிலிருந்து வெளியேறிச் சென்று நேற்று இரவு தன்னிடம் அகப்பட்ட ஆயிரம் வரையான மக்களை மனிதக் கேடயங்களாக முன்னிறுத்தி இன்று சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்னகர்வின் போது, அவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான இனஅழிப்புத் தாக்குதலில் இன்று திங்கட்கிழமை 1,496 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 3,333-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் 476 பேர் சிறுவர்கள். )

வாடிக்கை

வாடிக்கை
வாடிக்கை
தமிழினத்தின்…
உறுப்புகளை நசுக்கி,
உயிரை…
இரத்தத்தில் தோய்த்தெறிவது,
இலங்கையின் வாடிக்கை!.

இதைக் கண்டிக்காத
உலகின் செயல்…
இன்றுவரை வேடிக்கை!!.
    
                      ( ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009.  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள  பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று இரவு வரை நடத்திய தாக்குதல்களில் 310 அப்பாவி பொதுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 542-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.)

உடன்பாடு
உடன்பாடு
உடன்பாடில்லை
இனவெறிக்கு…
உடல் “சகதி”யாக.

உடன்படுகிறது
எங்காவது…
உயிர் “அகதி”யாக.

   (இலங்கை இராணுவ இன்னலினால்…இடம்பெயரும் எம்மினம்)
வாழ்ந்த இனம்...
வாழ்ந்த இனம்...
தன்னிருப்புக்குள்
தன்மானத்துடனும்,
தன்மானத்தில்
தனிறைவுடனும்,
“வாழ்ந்த இனம்”
இன்று,
உள்நாட்டிலேயே அகதியாகி
ஒருவேளை உணவுக்கென
கை நீட்டுது!_இது
உணர்வுள்ள தமிழனின்
உள்ளத்தில் பாரம் கூட்டுது!

ஈழத்திற்கு ஆதரவு என்போர்க்கு
இத்தேர்தலில் ஓட்டளிப்போம்!

இலங்கைக்கு ஆயுதம் தந்தோர்க்கு
இப்பவே திருவோடளிப்போம்!!

அழும் ஆயுதம்!


அழும் ஆயுதம்!
அழும் ஆயுதம்!
ஆயுதம் கூட
அழுதிருகும்…
அப்பாவி குழந்தைகளை
கொன்றோம் என்று!

ஆறறிவு அசுரனோ
அலைகிறான்…
அன்றாடம்
கொல்வேன் என்று!!

கொன்றவன், (ரா)சப்பச்சே)
மனித மிருகம்!_ உள்ளம்
எங்கே உருகும்?

        (இலங்கை ஆயுதம் கொன்ற_நம்
ஈழ குழந்தைகள்)

பயங்கரவாதிகள்???


பயங்கரவாதிகள்???
பயங்கரவாதிகள்???
மண்ணில் பாதம் பட்டாலே
மழலைகள் துடிக்கும்.
மகிந்தாவின் ஆயுதமோ
மழலைமீதும் வெடிக்கும்.

பயங்கரவாதத்தை,
இப்படித்தான்…
அழிக்கிறான்.
பச்சிளங்குழந்தைகளை
கொன்றுத்தான்…
குவிக்கிறான்.

உலகம்_ இதை,
உணர்ந்துக் கொள்ள மறுக்கிறது!
இலங்கை_ தன்
கொலை கணக்கை பெறுக்கிறது!!.

         (ஈழத்தில் பேரினவாதிகளால் கொல்லபடும்…நம் பிஞ்சு உறவுகள்)

இந்திய நாடகம்
இந்திய நாடகம்
உலகின் முதன்முறையாக…
காங்கிரஸ் கூட்டணி தயாரிப்பில்
இத்தாலியின் இயக்கத்தில்…ஓர்
இந்திய நாடகம்.

“ஆயுதம் அனுப்பி
அதிசய போர் நிறுத்தம்”

இவர்களின் தேவை…
ஈழ தமிழனின் உயிரும்,
இங்குள்ளத் தமிழனின் ஓட்டும்.

உயிருக்கு,
ஆயுதம் அனுப்புது!.
ஓட்டுக்கு,
அழுவதாய் நடிக்குது!!.

இன்னுமா தமிழன்
முட்டாளாய் இருப்பான்?
இந்தத் தேர்தலில் உங்கள்
முகத்திரை கிழிப்பான்!.

         (ஈழத்தமிழினத்தினை கொன்று குவிக்கும் சிறிலங்கா அரசுக்கு 80 சரக்குந்துகளில் போர் தளவாடங்களை இந்திய அரசு இன்று அனுப்புகிறது. சேலம் வழியாக செல்லும் பொழுது இதை கேள்விப்பட்ட தமிழுணர்வாளர்கள் அவ்வண்டிகளை தடுக்கும் முயற்சிகளில் இறங்கினர். அதில் 5 லாரிகளை கோவையில் அடித்து எரித்துள்ளனர். பலர் கைது.)

உயிர்த் தே(பே)டிகள்


உயிர்த் தே(பே)டிகள்
உயிர்த் தே(பே)டிகள்
வெட்டிச் சாய்த்தப்பின்
ஒட்டிக் கொண்டிருக்கும்
ஒருத்துளி உயிரையும்
ஆயுதம் கொண்டு நசுக்கிறான்
அதையோரு சிங்களன் ரசிக்கிறான்.

இது,
அன்று தொடக்கம்
இன்று வரை தொடருது!
எம்மினம்,
அரை உயிர், கால் உயிராய்
அவதியாலே கதருது!!
 எல்லைகளற்று
எங்கெங்கோ சிதறுது!!!. 


   (1983-ல் ஈழ தமிழினத்தின் மேல் நடாத்தப்பட்ட வன்முறையில் ஒருத்துளி.)

ஈழத்தில் ஒரு கோன்டானாமோ!
ஈழத்தில் ஒரு கோன்டானாமோ!
அன்று,
கைகளுக்கு விலங்கிட்டு
கண்களைப் பிடுங்கி_அதை
கால்களால் மிதித்தது…
காடையர்க் கூட்டம்.

இன்று,
கைகால்களை கட்டி
ஆடைகளை உருவி,
“அவை” போடுகின்றன…
துச்சாதன ஆட்டம்.

இது,
உடலியல்
உளவியல் சித்ரவதை!
உறவுகளே!
உலகுக்கு பரப்புங்கள்…
சித்தன் சொல்லுமிதை!!

            (15 வயது தொடக்கம் 35 வயதிற்கு உட்பட்ட இளைஞர் மற்றும் யுவதிகள் கைது செய்யப்பட்டவர்களை முழு நிர்வாணமாக்கி இருவர் இருவராக கைவிலங்கிட்டு வீடுகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகளில் முழு நிர்வாணமாக நுளம்புக்கடியுடன் மற்றும் பல அவஸ்தைகளில் தமிழர்கள் கைதிகளாக உள்ளதாக எமது புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன)

இரட்டைத் தாக்குதல்!!!

இரட்டைத் தாக்குதல்!!!
இரட்டைத் தாக்குதல்!!!
இரைப்பையை ஈரமாக்க
ஏதுமில்லா நிலை!
மரணம் ஒன்றே
இதற்க்கான விலை!!

ஆயுதம் அனுப்பி
மக்களை கொல்லுதல்!
அரிசி பால்மா அனுப்பாது
மரணத்தில் தல்லுதல்!!

இப்படித்தான்…
இலங்கை செய்யுது,
இரட்டைத் தாக்குதல்!
அதன் எண்ணமெல்லாம்,
ஈழத்தமிழினத்தை
இல்லாது ஆக்குதல்!!.

    (மனசாட்சி உள்ள வாக்காளர்களே!
     ஈழம் காக்க வாக்களியுங்கள்,_அங்கே
     இருப்பவர்களுக்கேனும் வாழ்வளியுங்கள்.
     ஈழத்தமிழினத்தைக் காக்கும் கடைசி ஆயுதம் உங்கள் கைகளிள்)

எங்கேடா போர்நிறுத்தம்???
எங்கேடா போர்நிறுத்தம்???
ஒருநாள் பட்டினியில்
உயிர் போகும்…கிழவியை,
கனரக ஆயுதத்தால்
கை கால் உடைத்துக் கொல்லுது!.
இந்தியாவும் இலங்கையும்
இதைத்தான்
போர்நிறுத்தமுன்னு சொல்லுது!!.

இது,
இந்திய இலங்கை கூட்டு நாடகம்!
இன்றைய திகதிக்கான ஓட்டு நாடகம்!!.

(கனரக ஆயுத தவிர்ப்பு காலத்தில் படையினரால் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது 5600 எறிகணைகள் ஏவப்பட்டுள்ளன: 200 பொதுமக்கள் கொலை; 1000 ற்கு அதிகமானோர் காயம்
செவ்வாய்க்கிழமை, 28 ஏப்ரல் 2009)

பிஞ்சு வலிமை!

பிஞ்சு வலிமை!
பிஞ்சு வலிமை!
அன்றாடம் மரணம் பார்த்தேன்
அது போல இரத்தம் பார்த்தேன்
ஆங்காங்கே சடலம் பார்த்தேன்
அழுகுரல் தினமும் கேட்டேன்.
அகவை அய்ந்துக்குள்,
அத்தனையும் பழகிப்போச்சு.
…   …   …
என் குருதி வழிந்தோடும்…
வலியதுவும் மரத்துப்போச்சு!

            (முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எவ்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின. சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009)

ஈழ அவலம்

ஈழ அவலம்
ஈழ அவலம்
குட்டிகளை சுமந்தோடும்
கங்காருகளாய்………

சேய் உயிர் ஏந்திக்கொண்டு
தாய் ஓடும் அவலம் பாரீர்!
ஓடிவந்த மக்கள் மீதும்
தேடித்தாக்கும் படையை காணீர்!!

இடம்பெயர்ந்து, இடம்பெயர்ந்து
எங்குவந்தோம் தெரியவில்லை!,
எம்மினத்தின் தலைகள் கண்டால்
வான்படையின் குண்டுத்தொல்லை!!

பசியால் குழந்தை துடிக்கிறது
பக்கத்திலே குண்டு வெடிக்கிறது.
இது,
பசிக்கின்ற குழந்தைகு,
பாலூட்டும் அவகாசம்
கிடைக்காத ஒரு தேசம்!!!.

    சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009   சிறிலங்கா வான்படையினரால் சுமார் 20 நிமிடம் வரை நடத்தப்பட்ட இக்குண்டுத் தாக்குதலின் போது 16 குண்டுகள் வீசப்பட்டன.)

போராட்டம்!!!

போராட்டம்
போராட்டம்
அரை உயிரை காப்பாற்ற,
ஒரு உயிரின் போராட்டம்!

இலங்கையை கண்டிக்க,
இன்னும் ஏன் தடுமாற்றம்!!

        (  முள்ளிவாய்க்காலில் இன்று மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்: 174 பொதுமக்கள் படுகொலை;212 பேர் படுகாயம்.  சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009)

தாயின் போராட்டம்

தாயின் போராட்டம்
தாயின் போராட்டம்
குண்டு மழைக்கிடையே
வாழ்க்கை நீரோட்டம்!_அதில்
குழந்தையைக் காப்பாற்ற
ஒரு தாயின் போராட்டம்!!

எப்போது காண்போமோ…
தமிழீழத் தேரோட்டம்!!!

      (இறுதி கட்ட போர் நாட்களில் …ஒரு துயர போராட்டம். அவரவர் உணரும் போதுதான் உண்மை வலி புரியும்)

வணங்காமண்

வணங்காமண்
வணங்காமண்
பசியால் துடிப்போர்க்கும்
பாதி உடலாய் கிடப்போர்க்கும்
உணவு மருந்தேந்தி வந்த
உறவு கப்பலை…
படைக்கொண்டு வளைத்து
தடை செய்து சிறைவைத்து
ஏதேதோ சொல்லி
இலங்கை நடிக்குது!
இருக்கும் தமிழினத்தையும்
கொல்லத் துடிக்குது!!
இதை காணும் தமிழ்மனம்
இதயம் வெடிக்குது!!!

வணங்கா மண்னை,
அழும் இனம்
எதிர்பார்த்து நிற்கிறது!
ஆயுத இனம்
எதிர்த்து நிற்கிறது!!

      (வணங்காமண் செயற்பாட்டுக் குழுவின் உத்தியோக பூர்வ அறிக்கை
புலம்பெயர் மக்களால் தாயக மக்களுக்காக சேகரிக்கப்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களுடன் தாயகம் நோக்கி பிரான்சிலிருந்து மே மாதம் 7-ம் திகதி புறப்பட்ட வணங்கா மண் கப்பல் நேற்று (04-06-2009) அதிகாலை இலங்கைக்கருகில் சர்வதேச கடற்பரப்பில் சென்று கொண்டிருந்தபோது தமிழீழ விடுதலைப் புலிகளின் விநியோகக் கப்பல் எனச் சந்தேகித்து சிறிலங்கா கடற்படையின் ஐந்து போர்க் கப்பல்கள் கொண்ட அணியினரால் சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளது

கிழிந்த புத்தகம்

கிழிந்தப்புத்தகம்
கிழிந்தப்புத்தகம்
அடுத்த நூற்றாண்டின்
அகழ்வாராட்சி சொல்லும்,
இங்கே
கனரக ஆயுதம்
பாவிக்கபட்டதையும்,
கண்ணீரோடு ஓரினம்
பாதிக்கப்பட்டதையும்.

அப்போதாவது…
உம்மென்று இருக்கும்
உலகறியுமா…?
சிங்கள ஆயுதம்
கிழித்து போட்ட
தமிழ் புத்தகத்தை!

         (இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)

அக அஞ்சலி!


அக அஞ்சலி!
அக அஞ்சலி!
தமிழினம்…
கொத்துக் கொத்தாய்ச் செத்தபோது
ஒற்றைச் செய்தியும் போடாது…

சாகாத தலைவனை,
செத்ததாய் படங்கள் போடும்,
ஊடகத்தின்…
“செத்துப்போன நேர்மைக்கு”
என் அக அஞ்சலி!

இருபதுக்கு இருபது போட்டியின்
இறுதி நேர ஆட்டத்தில்
ஊறிப் போனதால்…

ஈழ உரிமையின்
இறுதிப் போரில்
எல்லை சுருங்கிய போது
“இறந்து போன உன் உணர்வுக்கு”
என் அக அஞ்சலி!!

சமாதனம் ஏந்தி வந்த
எங்களின்
வெள்ளைக் கொடிகளை…

சிவப்பாக்கி கொன்ற
சிங்கள இராணுவத்தின்
“மரித்துப்போன துணிச்சலுக்கு”
என் அக அஞ்சலி!!!

     (தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்   …  
எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார் என்றார்)

ஒப்பாரிச் சத்தம்!

ஒப்பாரிச்சத்தம்
ஒப்பாரிச்சத்தம்
உலகம் அதிர
ஓவென அலரும்
ஒப்பாரிச் சத்தங்கள்_கொஞ்சம்
ஓய்ந்து விட்டன.

இராணுவ வன்முறை
குறைத்து விட்டது…
மரண எண்ணிக்கையை அல்ல
மனித எண்ணிக்கையை!

      (13.05.2009 முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் கோரக்காட்சி

வன்னி மக்கள்


வன்னி மக்கள்
வன்னி மக்கள்
அன்று,
“வள்ளல் பாத்திரமாய்”
வாழ்ந்தவர்கள்…
இன்று,
“வறுமை பாத்திரமாய்”
வரிசையில்.

சிங்கள தாக்குதல்,
உயிரை
சிதைத்தும் செல்லும்!
சிதைக்காமலும் கொல்லும்!!

            ( வருவோர்க்கு அள்ளிக் கொடுத்த வன்னி மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்காக முகாம்களில் உணவுக்காக பாத்திரங்களை அடுக்கி காத்திருக்கும் நிலையை பாருங்கள்.  திங்கட்கிழமை, 11 மே 2009)

இறந்து வடித்தக் கண்ணீர்!


இறந்து வடித்தக் கண்ணீர்!
இறந்து வடித்தக் கண்ணீர்!
கருவறைக்குள்ளேயே…
புறச்சூழலின் அதிர்வுகளை
புரிந்துணர்ந்தேன்.

என்னைச் சுமந்தவள்
ஏக சக்திகளை இழந்திருந்தாள்
என்னைக்காக்கும் பொருட்டு.

என்னை பெற்றெடுக்க
ஒரு காட்டு மரம்
நிழல் தந்தது!.

தாக்குதல் அத்தனையிலும்
என்னைக்காக்கவே
எல்லா நாளும் போராடினாள்
அம்மா.

“அம்மா”
என்று அழைத்தப்பின்னும்,
“அம்மா”
என்பதைக் கேட்டப்பின்னும்
நிகழ்த்தப்பட்டிருந்தால்…
நிறைவை தந்திருக்கும்,
எங்கள் மரணம்.

இது,
நீங்கள்
இரங்க வடித்தக் கவிதையல்ல.
நான்,
இறந்து வடித்தக் கண்ணீர்.

       (  ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009.  சிறிலங்கா படையினர் சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட கிளஸ்ரர் எறிகணைகள், ஆட்லறி எறிகணைகள், கனோன் ரக பீரங்கிகள் மற்றும் பல்குழல் ரொக்கட் லோஞ்சர் ஆகிய கனரக நாசகார ஆயுதங்களைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலில் மாண்ட ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில்…இந்த அழகிய மழலையும் அடக்கம்)

சூழ்ச்சி


சூழ்ச்சி
சூழ்ச்சி
இந்திய ஆயுதத்தில்
தமிழனின் வரி.

இலங்கையின் இராணுவத்தில்
இந்திய ஆயுதம்.

தமிழனை கொல்லுது
இலங்கை இராணுவம்.

இந்த சுழற்சியில்
ஓர் சூழ்ச்சி.

தமிழினத்தை,
அழிப்பதே குறி!_அதற்கு
துணைப் போகிறது
தமிழனின் வரி!!

     (சோனியா, தமிழகத்திற்கு வந்து, போர் நிறுத்தம் வந்துவிட்டது என்ற பொய் கூறவதற்கு சற்று முன்  இலங்கையின், முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்றிரவு தொடக்கம் நடத்திய உச்சகட்ட தாக்குதலில் 1,112 க்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009)

மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)

மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)
மக்களைக் கொன்ற மகராசி (சோனியா)
கருவறைக் குள்ளும்
ஆயுதம் இறக்கி
கருவறுக்கும்…
குரூரத்தின் அடையாளமே!
ஒரு,
பெண்ணுக்குள்ளே
இத்தனை வன்மையா…
என்றென்னும் அவமானமே!!

இந்திய பெண்னென்றால்
இளகும் மனசு.
இத்தாலிய பெண்னுனக்கு
இறுகிய மனசு.

பிள்ளைகளை கொன்ற
முரண் “அன்னை” நீ!

எங்கள் குழந்தைகளுக்கு
ஒப்பாரி பாடவைத்த
ஒப்பற்ற “தாய்” நீ!

குழந்தை இரத்தத்தை
பாலாடையில் நிரப்பிய
பாச “அம்மா” நீ!

ஈழ மக்களின் வாழ்வை
இருட்டாக்கிய…
இந்திய இறக்கு “மதி” யே!

தூளிகளுக்கு பதில்
பாடைக் கட்டிய
புண்ணிய”வதி” யே!!

எங்கள் காந்தி
ஏந்தியது அகிம்சையை!
இத்தாலிய காந்தி நீ
ஏந்துவது ஆயுதத்தை!!

மக்களை கொன்ற மகராசியே,
உன்…
கொடூரத்தின்
கொள்ளளவு என்ன?
கொல்லளவு என்ன?

உனக்கு ஓட்டளிப்பவன்
தமிழனில்லை.
உனக்கு ஓட்டளித்தால்
தமிழினமே இல்லை.

    (மனசாட்சி உள்ள வாக்காளர்களே!
     மன்றாடி கேட்கிறேன்.
     கட்சிக்கும், காசுக்கும் ஓட்டளிக்காமல்
     இம்முறை மட்டும்…
     கண்ணீர் துடைக்க ஓட்டளியுங்கள்)

 ஞாயிற்றுக்கிழமை, 10 மே 2009  நேற்றிரவு 1,000 ற்கும் அதிகமான பொதுமக்கள் படுகொலை: நாசகார பீரங்கி குண்டு மழை பொழிந்து சிங்களப் படை கோரத் தாண்டவம் )

இனவெறியின் தழும்பு

இனவெறியின் தழும்பு
இனவெறியின் தழும்பு
இது,
இலங்கையின்  அழும்பு!
இனவெறியின்  தழும்பு!!
இரண்டிற்க்கும்…
வரியுமில்லை_ஒரு
நெறியுமில்லை.

போர் காயங்களை
சுமந்து நிற்கிறது சுவர்!
எங்கள்,
போர் காயங்களுக்கு
மருந்திடுபவர் எவர்?

   (சிங்கள பெளத்த இனவெறியை
     சுமந்து நிற்கும் சுவர்)