செல்லடி சத்தமின்றி
செல்லமே நீ உறங்கு,
தாய்ப்பாலும் வத்திப்போச்சு
தங்கமே நீ உறங்கு,
வேதனையை தாங்கிக்கடா
வேகமா அழுதிடாத!
அழும் சத்தம் கேட்டாக்கூட
அங்கிருந்தே ”ஆட்லெறி”யை
ஆர்மிக்காரன் வீசிடுவான்.
(துணுக்காய் அகதி)
செல்லமே நீ உறங்கு,
தாய்ப்பாலும் வத்திப்போச்சு
தங்கமே நீ உறங்கு,
வேதனையை தாங்கிக்கடா
வேகமா அழுதிடாத!
அழும் சத்தம் கேட்டாக்கூட
அங்கிருந்தே ”ஆட்லெறி”யை
ஆர்மிக்காரன் வீசிடுவான்.
(துணுக்காய் அகதி)
நிலாச் சோறு
வேண்டாம்,
நிம்மதிச் சோறு
போதும்.
(துணுக்காய் அகதி)
வேண்டாம்,
நிம்மதிச் சோறு
போதும்.
(துணுக்காய் அகதி)
நேற்று,
கதைத்துக் கொண்டிருந்தவர்கள்,
இன்று,
கதைக்கப் படுகின்றவர்கள்.
உபயம்!
இனத்தை அழிக்கும்
இலங்கையின்,
அரச நெருப்பு (எறிகுண்டு வீச்சு).
கதைத்துக் கொண்டிருந்தவர்கள்,
இன்று,
கதைக்கப் படுகின்றவர்கள்.
உபயம்!
இனத்தை அழிக்கும்
இலங்கையின்,
அரச நெருப்பு (எறிகுண்டு வீச்சு).
No comments:
Post a Comment