Sunday, January 2, 2011

தாலாட்டு

தாலாட்டு
தாலாட்டு
செல்லடி சத்தமின்றி
செல்லமே நீ உறங்கு,

தாய்ப்பாலும் வத்திப்போச்சு
தங்கமே நீ உறங்கு,

வேதனையை தாங்கிக்கடா
வேகமா அழுதிடாத!

அழும் சத்தம் கேட்டாக்கூட
அங்கிருந்தே ”ஆட்லெறி”யை
ஆர்மிக்காரன் வீசிடுவான்.
           (துணுக்காய் அகதி)
ஆசை
ஆசை
நிலாச் சோறு
        வேண்டாம்,

நிம்மதிச் சோறு
         போதும்
.

 (துணுக்காய் அகதி)
அரசநெருப்பு
அரசநெருப்பு
நேற்று,
கதைத்துக் கொண்டிருந்தவர்கள்,

இன்று,
கதைக்கப் படுகின்றவர்கள்.

உபயம்!
இனத்தை அழிக்கும்
இலங்கையின்,
அரச நெருப்பு (எறிகுண்டு வீச்சு).

No comments:

Post a Comment