Sunday, January 2, 2011

அமரர் ஊர்தி

அமரர் ஊர்தி
அமரர் ஊர்தி
அமரும் ஊர்தித்தான்…,
அமரர் ஊர்தியாகின

நன்கொடையாளன்,
நா(ரா)சப்பச்சே!.

          (26 மார்ச் 2009 -ல் வன்னியில் படையினரின் எறிகணை மற்றும் RPG  தாக்குதலில் மாண்டவர்களில் (46) சிலர்) 
கூடு
கூடு
வில் அம்போடு வந்த
வேடர் கூட்டம்…

சிட்டுக் குருவிகளின்
சிறகுகளை முறித்த பின்
சிதைத்து போட்டக் கூடு!.
    (1983, சூலை -ல் இன அழிப்பின் எச்சம்)

பிழிவு
பிழிவு
தாங்கிய மண்ணே,
தாங்கிக்கொள் எங்கள் பிரிவையும்
உன்னை பிரிவதுபோலோரு
உலகில் துயரில்லை

காத்திரு மண்ணே…
காலம் கனியும்வரை
கட்டாயம் வருவோம்.

மண்ணே உன் மடியில்
மறுபடியும் வாழனும்,
மரணம் நிகழ்ந்தப்பின்னும்
உனக்குள்ளே தூங்கனும்.

            (20 ஆக 2008-ல், படை தாக்குதலால் வாழ்விடத்தை பிரியும்  அக்கராயன் பகுதி மக்கள்)

No comments:

Post a Comment