
தருணங்கள்...
உலகெல்லாம்…
இறைத்து வைத்திருக்கிறது,
காலம்!.
எங்களின்,
சிறுவயது வாழ்க்கை…
சிரித்தப்படி… கதைத்தப்படி
அமையாது போக,
அப்பா, அம்மாவின்
கைவிரல் பிடித்து
கரையேறிவிட்டோம்…
ஏதும் அறியாது!
இன்று,
கைக்கு எட்டிவிட்ட
எந்த பிரமாண்டங்களிலும்
மனம் ஒப்ப மறுக்கிறது!
எங்கள் மண்ணில்
எங்களின் விடுதலைக் காற்றை
நுரையீரல் முழுதும் நிரப்பி
நுகரதான்… ஏங்குகிறது!
எங்கள்,
சிறுவயதுக்கு விலங்கிட்டு
உரிமை மறுத்த
அதே மண்ணில்,
எம் பிள்ளைகள் ஒன்றாய்
சிரித்தபடியும்…
கதைத்தபடியும்
செல்லுமந்த
செம்மார்ந்த தருணங்களை
என்வீட்டின் திண்ணையிலிருந்து
இறுமார்ந்து காண வேணும்
இதற்கான அமைவு வேணும்.
(அன்பானவர்களே!
கடந்த சில மாதங்களாக இந்த வலைதளத்தில் எழுதிவருகிறேன். இதற்கான “படங்களை”செய்தி பக்கத்தில் இருந்தும் சிலருடைய வலைப்பக்கத்திலிருந்தும் எடுத்தாண்டேன்.அதற்காக அவர்களுக்கு எம் மனமார்ந்த நன்றிகள்.
என் படைப்பை சிலர் தங்களின் வலைப்பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளீர்கள்… ஆனால் அந்த படைப்பில் எனது பெயரோ… எனது வலைப்பக்கத்தின் பெயரோ குறிப்பிடபடவில்லை. இது படிப்போரிடம் ஓர் குழப்பத்தை (யார் எழுதினார்கள் என்ற ) ஏற்படுத்துகிறது. ஆகையால் இனி எனது படைப்பை தங்களின் வலையில் பதிவேற்றம் செய்தால் கண்டிப்பாக எனது பெயரையோ அல்லது எனது வலைப்பதிவின் பெயரையோ கண்டிப்பாக குறிப்பிட வேண்டுகிறேன். நன்றி!
அன்புடன்…நான்…சித்தன். வழிக்கு வந்த சித்தனுக்கு நன்றி !!!
No comments:
Post a Comment