வடு
வடு
ஓய்ந்தது போர் சத்தம்
திரும்பி பார்த்தேன்
“அகதி”யாகிய நான்…
“அனாதை”யானேன்.

அன்று…
சிதறி ஓடியவர்கள்
சிதைந்து கிடந்தார்கள்.

என் குடும்பத்தில்
நான் தான் மிச்சம்!
இந்தப் போரில்
நானும்…எச்சம்!!

வாழும் வரை_இந்த
வலி இருக்கும்!_நான்
வாழ்ந்த பின்னும்_இந்த
வடு இருக்கும்!!

        (பேரினவாத போர் தந்த துயரம்)