Sunday, December 26, 2010

வாடிக்கை

வாடிக்கை
வாடிக்கை
தமிழினத்தின்…
உறுப்புகளை நசுக்கி,
உயிரை…
இரத்தத்தில் தோய்த்தெறிவது,
இலங்கையின் வாடிக்கை!.

இதைக் கண்டிக்காத
உலகின் செயல்…
இன்றுவரை வேடிக்கை!!.
    
                      ( ஞாயிற்றுக்கிழமை, 19 ஏப்ரல் 2009.  முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள  பாதுகாப்பு வலயம் மீது சிறிலங்கா படையினர் நேற்று நள்ளிரவு தொடக்கம் இன்று இரவு வரை நடத்திய தாக்குதல்களில் 310 அப்பாவி பொதுகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 542-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.)

உடன்பாடு
உடன்பாடு
உடன்பாடில்லை
இனவெறிக்கு…
உடல் “சகதி”யாக.

உடன்படுகிறது
எங்காவது…
உயிர் “அகதி”யாக.

   (இலங்கை இராணுவ இன்னலினால்…இடம்பெயரும் எம்மினம்)
வாழ்ந்த இனம்...
வாழ்ந்த இனம்...
தன்னிருப்புக்குள்
தன்மானத்துடனும்,
தன்மானத்தில்
தனிறைவுடனும்,
“வாழ்ந்த இனம்”
இன்று,
உள்நாட்டிலேயே அகதியாகி
ஒருவேளை உணவுக்கென
கை நீட்டுது!_இது
உணர்வுள்ள தமிழனின்
உள்ளத்தில் பாரம் கூட்டுது!

ஈழத்திற்கு ஆதரவு என்போர்க்கு
இத்தேர்தலில் ஓட்டளிப்போம்!

இலங்கைக்கு ஆயுதம் தந்தோர்க்கு
இப்பவே திருவோடளிப்போம்!!

No comments:

Post a Comment