அக அஞ்சலி!
அக அஞ்சலி!
தமிழினம்…
கொத்துக் கொத்தாய்ச் செத்தபோது
ஒற்றைச் செய்தியும் போடாது…

சாகாத தலைவனை,
செத்ததாய் படங்கள் போடும்,
ஊடகத்தின்…
“செத்துப்போன நேர்மைக்கு”
என் அக அஞ்சலி!

இருபதுக்கு இருபது போட்டியின்
இறுதி நேர ஆட்டத்தில்
ஊறிப் போனதால்…

ஈழ உரிமையின்
இறுதிப் போரில்
எல்லை சுருங்கிய போது
“இறந்து போன உன் உணர்வுக்கு”
என் அக அஞ்சலி!!

சமாதனம் ஏந்தி வந்த
எங்களின்
வெள்ளைக் கொடிகளை…

சிவப்பாக்கி கொன்ற
சிங்கள இராணுவத்தின்
“மரித்துப்போன துணிச்சலுக்கு”
என் அக அஞ்சலி!!!

     (தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று சிறிலங்கா அரசாங்கமும் அதன் இராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும்   …  
எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார் என்றார்)