கிழிந்தப்புத்தகம்
கிழிந்தப்புத்தகம்
அடுத்த நூற்றாண்டின்
அகழ்வாராட்சி சொல்லும்,
இங்கே
கனரக ஆயுதம்
பாவிக்கபட்டதையும்,
கண்ணீரோடு ஓரினம்
பாதிக்கப்பட்டதையும்.

அப்போதாவது…
உம்மென்று இருக்கும்
உலகறியுமா…?
சிங்கள ஆயுதம்
கிழித்து போட்ட
தமிழ் புத்தகத்தை!

         (இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் 20,000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.)