மரணக்குழிகள் 1346
மரணக்குழிகள் 1346
மகிந்தாவின் கூட்டுப்படை
மண்ணில் ஆயிரமாயிரம்
மரணக்குழிகளை வெட்டியதாம்,
அங்கே அடர்த்தியாய்
வாழ்ந்த தமிழினத்தை
வன்முறையால் வதைத்ததாம்!
பின்,
கொன்றும் கொல்லாமலும்
குழிக்குள் தள்ளிப் புதைத்ததாம்!!

இதை,
தொழிற்நுட்பம்
நிழற்ப்படமாய் சாட்சிச் சொல்லுது!
அதை இலங்கையின்
அரசினபேடிகள் மறைத்துச் செல்லுது!!

அப்”பாவிகள்” கொன்றது
அப்பாவிகளை என்ற
உண்மை ஒருநாள் வெளியாகும்!
அடே மகிந்தா
அன்றே உன் தலை தனியாகும்!!

மகிந்தா உன் வெற்றியை
நாளைய…
வரலாறு பழித்துச் சொல்லும்!
அன்று,
எம் மாவீரர் எண்ணம் தான்
அந்த…மண்ணில் வெல்லும்.


 (இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில், 7000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் அதை விட மிகப் பெரிய அளவில், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளை இலங்கைப் படைகள் கொன்று குவித்துள்ளதாக ஆம்னஸ்டி உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் கூறியுள்ளன.
இந்த நிலையில், வன்னிப் போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவில் உள்ள சவக்குழிகளின் சாட்டிலைட் படங்களை ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. மொத்தம் மூன்று பெரிய சவக்குழிகள் இதில் காணப்படுகின்றன. ஆனால் மொத்தம் 1346 சவக்குழிகள் இருப்பதாக ஆம்னஸ்டி தெரிவித்துள்ளது.)