வறுமைக் கூடு
வறுமைக் கூடு
உயிர்போன பிள்ளையின்
உடல் தரையில் காயுது,

பசித்துயரில் ஒருப்பிள்ளை
பால்மடியைத் தேடுது,

வழியில்லை பால்சுரக்க
வறுமையின் கூடு அது.

காட்சியாய் காணவே
இதயம் பதைக்குது!
எம்மினத்தை இலங்கை
இப்படித்தான் வதைக்குது!!

      (ஈழப் போரில், ஒரு துயரக்காட்சி)
    (இறந்ததாயிடம் பால் குடித்த குழந்தை செய்தி படித்தேன், அந்த வலியை பதிவுச் செய்ய அந்த படத்தை யாரேனும் நான் சித்தனுக்கு அனுப்புங்களேன். முகவரி www.naanchithan@gmail.com   நன்றி.)