பிஞ்சு வலிமை!
பிஞ்சு வலிமை!
அன்றாடம் மரணம் பார்த்தேன்
அது போல இரத்தம் பார்த்தேன்
ஆங்காங்கே சடலம் பார்த்தேன்
அழுகுரல் தினமும் கேட்டேன்.
அகவை அய்ந்துக்குள்,
அத்தனையும் பழகிப்போச்சு.
…   …   …
என் குருதி வழிந்தோடும்…
வலியதுவும் மரத்துப்போச்சு!

            (முள்ளிவாய்க்காலில் இடம்பெயர்ந்த மக்கள் வாழ்ந்துவந்த குடியிருப்புக்கள் மீது இன்று சனிக்கிழமை பிற்பகல் 2:15 மணியளவில் சிறிலங்கா வான்படையின் மிக், கிபீர், எவ்-7 ரக வானூர்திகள் இணைந்து குண்டுத் தாக்குதலை நடத்தின. சனிக்கிழமை, 25 ஏப்ரல் 2009)