
காக்கும் கடவுள்
தாக்கும் விலங்குகளுக்கு,
வேலியின் சிதைவோ…
விருந்தாகி போனது.
எங்களின்…
கட்டிலில் கால் நீட்டி,
வீச சொல்கிறது
வெண்சாமரத்தை.
விலங்குகளே- எச்சரிக்கை
காவல் கடவுள்
மீண்டும் வரும்- எமது
விடுதலை பூமியை
வென்றுத் தரும்.
அன்று,
புதிதாய் உருவாகும்
எமது நாடு!
அதுவரை,
போகட்டும் அகதியாய்
எம்முயிர் கூடு!!
(தனக்கான பாதுகாப்பு வேலி சிதைந்தப்பின்…அடிமையாய் வாழ உடன்படாது… அகதியாகும் எம் உறவுகளின், நம்பிக்கையும் ஏக்கமும் இது.)
No comments:
Post a Comment