"கருப்பு யூலை"கள்!
"கருப்பு யூலை"கள்!
அன்று,
வாழ்விடத்தில்…
கலவரம் செய்தது!

இன்று,
கலவர இடத்தில்…
வாழச் செய்யுது!!

இழப்பும்
வலியும்
மாற வில்லை!

இது,
பேரின வாதத்தின்
மாறாத் தொல்லை!!

       (1983 -ல் தமிழர்களின் மீது அரசே நடத்திய இனகலவரத்தில்…சொத்துக்கள் அழிப்பு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற கொடிய துயரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டன. அதே துயரங்கள் இப்போதும் பசி பட்டினியுடன் முள் கம்பிகளுக்குள் நடத்தப் படுகின்றன)