"1983"
"1983"
எம்,
மதில் சுவரைத்
தகர்த்த மமதையில்…
உள் நுழையும் நாய்கள்,
சோற்றுப் பானையில்
வாய் விட்டு அலசுகிறது.

விரட்டினாலோ…
…வெறிக்கொண்டு பாய்ந்துவிடுகிறது!
எம் உடலெங்கும்_ தன்
நகக்கீறலை பதிந்துவிடுகிறது!!.

   (ஊடகத்தின் கண்ணில் கருப்புத்துணியை கட்டி… கொண்டாட்டம் என்ற பெயரில் அரசே அரங்கேற்றும் வன்முறையும் துன்பியல்களும் கடந்த “1983“ஐ நினைவுப்படுத்துகிறது.)